இந்த மாதிரி கேவலமான கேள்விய யாருகிட்டயும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம்!

இந்த மாதிரி கேவலமான கேள்விய யாருகிட்டயும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் மிகவும் வலுவான மற்றும் அழுத்தமுள்ளக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தேர்ந்த நடிகையாக உருவெடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிக முக்கிய நடிகையாக முன்னேறி வருகிறார்.

இந்த மாதிரி கேவலமான கேள்விய யாருகிட்டயும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம்!

வரலட்சுமி தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார்? அந்தக் கேள்வியால் கோபமடைந்த அவர் “திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இந்த மாதிரி கேவலமான கேள்விய யாருகிட்டயும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம்!

மேலும் “திருமணம் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமா? இல்லை அது ஒரு கொள்கையா? , பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கைகள் இருக்கக் கூடாதா? கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள்” என்று வரலட்சுமி காட்டமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story