அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் – நடிகர் கௌதம் கார்த்திக் ட்வீட்!

அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் – நடிகர் கௌதம் கார்த்திக் ட்வீட்!

அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் கௌதம் கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி குறித்து பயத்தை போக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் – நடிகர் கௌதம் கார்த்திக் ட்வீட்!

இதையடுத்து அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள், சினிமா துறையினர் என பலரும் தடுப்பூசிப்போட்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் ரஜினி, நயன்தாரா, காஜல் அகர்வால், அருண் விஜய், சூரி உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேபோன்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வையும் சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தி வருகின்றனர்.

அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் – நடிகர் கௌதம் கார்த்திக் ட்வீட்!

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக், இன்று தனது முதல் டோஸ் கொரானா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், நான் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். என்னுடைய பாதுகாப்புக்காகவும், மற்றவர்களின் பாதுகாப்புக்காகவும் பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தடுப்பூசி குறித்த எனது சந்தேகங்களை தீர்த்து வைத்த அனைத்து மருத்துவர்களும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Share this story