‘தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க’ – ரசிகர்களுக்கு நடிகர் சூரி வேண்டுகோள்

‘தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க’ – ரசிகர்களுக்கு நடிகர் சூரி வேண்டுகோள்

இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம் என நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரானாவின் 2வது அலையால் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரானா தொற்று பாதித்து நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி போடு பணியை தீவிரப்படுத்தி வருகிறது தமிழக அரசு. தடுப்பூசி குறித்து அச்சம் இருப்பவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

‘தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க’ – ரசிகர்களுக்கு நடிகர் சூரி வேண்டுகோள்

ஏற்கனவே சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசி போட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தடுப்பூசி குறித்து அச்சத்தை போக்கும் வகையில் தமிழ் சினிமாவை சார்ந்த பிரபல நடிகர், நடிகைகள் சமூக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அதேபோன்று சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சூரி, தனது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story