உருவாகிறது ‘கைதி 2’.. கார்த்தி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

உருவாகிறது ‘கைதி 2’.. கார்த்தி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ உருவாக இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உருவாகிறது ‘கைதி 2’.. கார்த்தி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் ‘கைதி’. நடிகர் கார்த்தி கைதியாக நடித்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் நரேன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

உருவாகிறது ‘கைதி 2’.. கார்த்தி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் மட்டுமே இருந்தது. இப்படி ஒரு படம் வந்தால் வெற்றிப்பெறுமா என்ற கேள்வி தமிழ் சினிமாவில் இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான விஷயங்களை உடைத்தெறிந்து, இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது.

உருவாகிறது ‘கைதி 2’.. கார்த்தி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி ரசிகர் ஒருவர் ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடன் சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்றார். அப்போது ‘கைதி 2’ கண்டிப்பாக உருவாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story