18 வருடங்களுக்குப் பிறகு சினிமா, மகளுடன் நடித்தது குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

18 வருடங்களுக்குப் பிறகு சினிமா, மகளுடன் நடித்தது குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

நடிகர் அருண் பாண்டியன் 90-களில் பிரபல நடிகராக இருந்து வந்தார். பல சூப்பர் ஹிட் படங்களின் அங்கமாக இருந்துள்ளார்.

அருண் பாண்டியன் 2010-ம் ஆண்டு விஜயகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த விருதகிரி படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

பின்னர் 11 வருடங்களுக்குப் பிறகு அன்பிற்கினியாள் படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய அருண் பாண்டியன், தனது மகள் கீர்த்தி பாண்டியனை கதாநாயகியாக நடிக்க வைத்தார். அதில் அவரும் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.


தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமா ரீஎன்டரி, அதுவும் தனது மகளுடன் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

“என் மகளுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. மேலும் இந்த படம் என்னில் ஒரு நடிகர் இருப்பதாக என்னையே நம்ப வைத்திருக்கிறது. ‘அன்பிற்கினியாள்‘ படத்தைப் போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். ” என்று தெரிவித்துள்ளார்.

எனவே இனி நடிகர் அருண் பாண்டியனை அடிக்கடி திரையில் பார்க்கலாம்.

Share this story