அந்தகாரம் நடிகருடன் அடுத்த படத்திற்குத் தயாரான கீர்த்தி பாண்டியன்!

அந்தகாரம் நடிகருடன் அடுத்த படத்திற்குத் தயாரான கீர்த்தி பாண்டியன்!

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ஹெலன் என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் ஆன அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அருண்பாண்டியனும் நடித்துள்ளார்.

அந்தகாரம் நடிகருடன் அடுத்த படத்திற்குத் தயாரான கீர்த்தி பாண்டியன்!

தற்போது கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குனர் கிரி மர்பி என்பவர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வினோத் கிஷனும் நடிக்கிறார். இன்று அப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பல யூடியூபர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் இப்படம், பள்ளிப் பருவத்தில் காதலித்து பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் இருவரைப் பற்றியது. இந்த படத்திற்கு ஹரி டஃபூசியா இசை அமைக்கவுள்ளார். சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிஷன் பற்றி பேசியபோது “வினோத் ஒரு புத்திசாலித்தனமான நடிகர், ஆனால் அவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எப்படியாவது, அவர் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு நடிகராக மாறுவார். நான் அவரின் ஒரு வித்தியாசமான பக்கத்தைக் கண்டேன். அவர் ஒரு வேடிக்கையான அன்பான பையன், பல திறமை வாய்ந்தவர், மிகச் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் டிரம்மர். கீர்த்தியும் ஒரு அருமையான நடிகை. எனவே, இந்த இரண்டு இளம் திறமைகளும் இணைந்து நடிப்பது ஒரு ரொமான்ஸ் காமெடி படத்திற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். மேலும் புதியதாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story