பேர் மாத்துனா மாட வெளிச்சம் குறைந்துவிடுமா என்ன? சர்ச்சையை அடுத்து பெயரை மாற்றிய மாரி செல்வராஜ்!

பேர் மாத்துனா மாட வெளிச்சம் குறைந்துவிடுமா என்ன? சர்ச்சையை அடுத்து பெயரை மாற்றிய மாரி செல்வராஜ்!

கர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் தற்போது மஞ்சனத்தி புராணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பேர் மாத்துனா மாட வெளிச்சம் குறைந்துவிடுமா என்ன? சர்ச்சையை அடுத்து பெயரை மாற்றிய மாரி செல்வராஜ்!

அதையடுத்து, ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல், குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதில் அந்தப் பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷுக்கு இந்த வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தற்போது பண்டாரத்தி புராணம் என்ற பாடலை மஞ்சனத்தி புராணம் என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பேர் மாத்துனா மாட வெளிச்சம் குறைந்துவிடுமா என்ன? சர்ச்சையை அடுத்து பெயரை மாற்றிய மாரி செல்வராஜ்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு பின்வருமாறு:

“அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் (குறிப்பு: படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்.)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தைப் போலவே இந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. வரும் ஏப்ரல் 9-ம் தேடி இப்படம் வெளியாகவிருக்கிறது.

Share this story