தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன் மோதலா ?.. ‘டாக்டர்’ படத்தை வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்…

தயாரிப்பாளருடன்  சிவகார்த்திகேயன்  மோதலா ?.. ‘டாக்டர்’ படத்தை வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்…

‘டாக்டர்’ படத்தை வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளர், சிவகார்த்திகேயன் இடையே மோதல் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளருடன்  சிவகார்த்திகேயன்  மோதலா ?.. ‘டாக்டர்’ படத்தை வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்…

நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, இளவரசு, விஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தை எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

தயாரிப்பாளருடன்  சிவகார்த்திகேயன்  மோதலா ?.. ‘டாக்டர்’ படத்தை வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்…

இப்படத்தை கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் முதலில் அறிவித்தனர். அதற்குள் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானதால் ரம்ஜானையொட்டி வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதற்குள் கொரானா தொற்று அதிகரிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் தற்போதைக்கு திரையரங்கில் வெளியிடுவது சாத்தியமில்லை.

தயாரிப்பாளருடன்  சிவகார்த்திகேயன்  மோதலா ?.. ‘டாக்டர்’ படத்தை வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்…

இதையடுத்து ‘டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் ஓடிடியில் படத்தை வெளியிட சிவகார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஓடிடியில் வெளியிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கும், சிவகார்த்திகேயனுக்கு மோதல் போக்கு உருவாகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Share this story