அல்லு அர்ஜுனுக்கு மிரட்டல் வில்லனாக மாறிய பஹத் ஃபாசில்!

அல்லு அர்ஜுனுக்கு மிரட்டல் வில்லனாக மாறிய பஹத் ஃபாசில்!

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தனக் கடத்தல் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

அல்லு அர்ஜுனுக்கு மிரட்டல் வில்லனாக மாறிய பஹத் ஃபாசில்!

இந்தப் படத்தின் வில்லன் யார் என்று தான் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பல நடிகர்கள் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஜெகபதி பாபு, ஆர்யா, விக்ரம் என பல நடிகர்கள் பெயர் வெளியானது.

லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

தற்போது மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். அல்லு அர்ஜுனுக்கு சரியான வில்லன் தான் என டோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

புஷ்பா திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Share this story