ரஜினியை நெருங்கவிடாமல் பாதுகாப்பாக நடக்கும் ஷூட்டிங்… இறுதிக்கட்டத்தில் ‘அண்ணாத்த’…

ரஜினியை நெருங்கவிடாமல் பாதுகாப்பாக நடக்கும் ஷூட்டிங்… இறுதிக்கட்டத்தில் ‘அண்ணாத்த’…

ரஜினியை யாரும் நெருங்காமல் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மிகவும் பாதுகாப்பாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை நெருங்கவிடாமல் பாதுகாப்பாக நடக்கும் ஷூட்டிங்… இறுதிக்கட்டத்தில் ‘அண்ணாத்த’…

 ‘அண்ணாத்த’  திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.

ரஜினியை நெருங்கவிடாமல் பாதுகாப்பாக நடக்கும் ஷூட்டிங்… இறுதிக்கட்டத்தில் ‘அண்ணாத்த’…

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இதில் ரஜினி நடிக்கவேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கொரானா பரவல் அதிகரித்து வருவதால் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாராவும் இணைந்து நடித்து வருகிறார். லாக்டவுன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதால் படத்தை சீக்கிரம் முடிக்க படக்குழுவுக்கு சன் பிக்சர்ஸ் அறிவுறுத்தியிருக்கிறது.

ரஜினியை நெருங்கவிடாமல் பாதுகாப்பாக நடக்கும் ஷூட்டிங்… இறுதிக்கட்டத்தில் ‘அண்ணாத்த’…

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை மிகவும் பாதுகாப்பாக நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். ஷூட்டிங்கின் போது ரஜினியிடம் பேச யாருக்கும் அனுமதியில்லையாம். இதோடு 5 அடி இடைவெளியில்தான் ரஜினியுடன் இயக்குனர் சிவாவும் பேசி வருகிறாராம். ஷூட்டிங்கின் போது கண்டிப்பாக பிபி கிட் அணிந்துகொண்டு தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக்கொள்கின்றனர் என கூறப்படுகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நடக்கும் இந்த ஷூட்டிங்கை வரும் மே 10ம் தேதிக்குள் முடித்துவிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Share this story