யாரையும் இவ்ளோ அழகா பாக்கல… ரஷ்மிகா மீது காதல் மழை பொழிய வரும் கார்த்தி!

யாரையும் இவ்ளோ அழகா பாக்கல… ரஷ்மிகா மீது காதல் மழை பொழிய வரும் கார்த்தி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பட சுல்தான். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

யாரையும் இவ்ளோ அழகா பாக்கல… ரஷ்மிகா மீது காதல் மழை பொழிய வரும் கார்த்தி!

சுல்தான் படத்திலிருந்து முதலாவதாக வெளியான ஜெய் சுல்தான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது கிடைத்தது. வடகறி, பட்டாஸ் போன்ற படங்களில் கலக்கிய விவேக் மெர்வின் கூட்டணி சுல்தான் படத்திலும் தரமான இசையை வழங்கியிருப்பர் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

யாரையும் இவ்ளோ அழகா பாக்கல… ரஷ்மிகா மீது காதல் மழை பொழிய வரும் கார்த்தி!

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share this story