கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு… எதற்கு தெரியுமா!?

கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு… எதற்கு தெரியுமா!?

இயக்குனர் கவுதம் மேனன் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியதற்காக யோகிபாபு தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு… எதற்கு தெரியுமா!?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அரசியல் கள எதார்த்தத்தை பொட்டில் அறைந்தாற் போல் காமெடியுடன் எடுத்துக்கூறியிருந்தது அந்தப் படம்.

பின்னர் மண்டேலா படத்தைப் பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், “யோகிபாபு நொறுக்கிவிட்டார். அவருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது கவுதம் மேனன் தன்னைப் பற்றி கூறியதைப் பார்த்துள்ள யோகிபாபு அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். யோகிபாபு மற்றும் கவுதம் மேனன் இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. விரைவில் இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட் ரசிகர்களைப் போலவே நாங்களும் அதற்காகக் காத்திருக்கிறோம்.

Share this story